நெடுமாறனுக்கு சிக்னல் கிடைத்தது
சத்தியமங்கலம்:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கச் சென்ற தூதுக்குழுவினருக்கு வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்துள்ளது.
வீரப்பன் விடுவிக்கக் கோரிய தடா கைதிகள் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், காட்டுக்குள் சென்றுள்ள தூதுக்குழுபேச்சுவார்த்தையை விரைவில் முடித்துக் கொண்டு திரும்பும் என்று தெரிகிறது.
அரசுத்தூதர் நக்கீரன் கோபால், தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறான், பேராசிரியர் கல்யாணி, புதுவை மக்கள் சிவில் உரிமைக் கழகசெயலாளர் சுகுமாறன் ஆகியோர் வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த காட்டுக்குள் சென்றுள்ளனர்.
இவர்கள் புதன்கிழமை தாளவாடி மலைப்பகுதிக்குச் சென்றதுமே வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்துள்ளது. இவர்கள் வியாழக்கிழமை இரவு அல்லதுவெள்ளிக்கிழமை காலை பேச்சுவார்த்தை நடத்தி விட்டுத் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.
புதியத் தூதுக் குழுவில் இடம்பெற்றுள்ள நெடுமாறனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் அதிக நாட்கள் காட்டுக்குள் தங்காமல்பேச்சுவார்த்தையை விரைவில் முடித்துக் கொண்டு திரும்புவார்கள் என்று தெரிகிறது.
தடா கைதிகள் விடுவிப்பில் சட்டச்சிக்கல்கள் இருப்பதால் வீரப்பனிடம் சமாதானமாகப் பேசி, மனிதாபிமானமுறைப்படி ராஜ்குமாரை விடுவிக்கவலியுறுத்துவார்கள். பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்காவிட்டாலும் ராஜ்குமாரை மட்டுமாவது தூதுக்குழு மீட்டு வரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.