For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாஜ்பாய் ஆட்சி சூப்பர் .. கருத்துக்கணிப்பில் 44 சதவீத ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பிரதமர் வாஜ்பாயின் ஆட்சி நன்றாக இருக்கிறது என்று 44 சதவீதம் பேர் கருத்துதெரிவித்துள்ளது.

பல கட்சிகளை உள்ளடக்கிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி,தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக வாஜ்பாய் பதவியேற்று ஓராண்டுநிறைவடைந்துள்ளது.

இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயல்பாடு, பிரதமராக வாஜ்பாயிசெயல்படும் விதம் பற்றி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த ஹிந்துஸ்தான் டைம்ஸ்என்ற பத்திரிக்கை முடிவு செய்தது.

அதன்படி டெல்லி, கல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 பெரு நகரங்களில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 18 முதல் 50 வயது வரையுள்ள சுமார் 800 பேரிடம் இக்கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

கருத்துக் கணிப்பு முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும், வாஜ்பாயிக்கும்சற்று தெம்பு அளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டாக பிரதமராக வாஜ்பாயின் செயல்பாடு நன்றாக இருப்பதாக 44சதவீதம் பேரும், மிக நன்றாக இருப்பதாக 25 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒட்டுமொத்த செயல்பாடுபரவாயில்லை என்று 39 சதவீதம் பேரும், 37 சதவீதம் பேர் நன்றாக இருக்கிறதுஎன்றும், மிக நன்றாக இருக்கிறது என்று 13 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாளையே தேர்தல் வந்தால் பாஜகவுக்குத்தான் எங்கள் வாக்கு என்று 51 சதவீதம்பேரும், 20 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஆதரவளிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு 19சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஜ்பாயிக்குப் பிறகு பிரதமர் பதவியை ஏற்க அத்வானிதான் சரியான நபர் என்று 45சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு,பாதுகாப்பத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோருக்கும் சிலர் தங்களதுஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

3-வது முறையாக பதவியேற்றுள்ள வாஜ்பாயிக்கு, இந்த சமீபத்திய கருத்துக் கணிப்புமுடிவுகள் சற்று நிம்மதியையும், தெம்பையும் அளித்துள்ளன என்றால் அதுமிகையில்லை.

முதன் முதலாக 1996-ம் ஆண்டு அறுதிப்பெரும்பான்மை வெற்றி இல்லாவிட்டாலும்வாஜ்பாய் ஆட்சி அமைத்தார். ஆனால், 13 நாட்களில் அந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு 1998-ம் ஆண்டு காங்கிரஸ் ஆதரவுடன் வாஜ்பாய் இரண்டாவதுமுறையாக ஆட்சி அமைத்தார். ஆனால், 13 மாதங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிதனது ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து அந்த ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

இப்போது அறுதிப் பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகள்மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்வாஜ்பாய். கடந்த வெள்ளிக்கிழமையுடன் வாஜ்பாய் ஆட்சி அமைத்து ஓராண்டுமுடிவடைந்தது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X