For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனப் பிரச்சினைக்கு இலங்கை புது அரசு தீர்வு காணும் - அமெரிக்கா நம்பிக்கை

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

இலங்கை இனப் பிரச்சினைக்குப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு நிச்சயம் தீர்வு காணும்என்று அமெரிக்க அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் மக்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

தேர்தலில் சந்திரிகா கட்சி பெற்ற வெற்றி குறித்து அமெரிக்க அரசு குறிப்பிடும்படியானகருத்தைத் தெரிவிக்கவில்லை. இருப்பினும், 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும்இனப்போரை முடிவுக்குக் கொண்டு வர புதிய அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றுநம்புவதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பும், தேசத்தின் ஒற்றுமை மற்றும்ஒருமைப்பாட்டைக்காக்கும் நடவடிக்கையிலும், இனக் கலவரத்தை முடிவுக்குக் கொண்டும்முயற்சியில் புதிய அரசு ஈடுபடும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக சில அமைப்புகள் கூறியுள்ளபோதிலும்,சுமார் 75 சதவீதம் பேர் வாக்களித்துள்ளது மீண்டும் அங்கு ஜனநாயகம் தழைப்பதற்கானவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X