For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முரளி கார்த்திக்கின் சூறாவளியில் சுருண்டது மும்பை

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

முரளி கார்த்திக்கின் அருமையான சுழற் பந்துவீச்சில், இராணி கோப்பையை ரெஸ்ட்ஆஃப் இந்தியா அணி கைப்பற்றியது.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 10 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

அந்த அணியின் முரளி கார்த்திக், மும்பை அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 9விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

முன்னதாக 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் என்ற நிலையில் திங்கள்கிழமை காலைமும்பை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

ஆனால், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் முரளி கார்த்திக்கின் சுழற்பந்து வீச்சுக்குமும்பை அணி வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் அவுட்டானார்கள். இறுதியில் 56ரன்களை மட்டுமே ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு இலக்காக நிர்ணயித்துவிட்டு 184ரன்களுக்கு மும்பை அணி ஆட்டமிழந்தது.

முரளி கார்த்திக் 70 ரன்களைக் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இப்போட்டியில் அவர் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம்பங்களாதேஷுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்தியஅணியில் இடம் பெறும் வாய்ப்பு அவருக்குப் பிரகாசமடைந்துள்ளது.

அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிவிக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

5 நாள் நடைபெற வேண்டிய இந்த ஆட்டம் 4-வது நாளிலேயே முடிந்துவிட்டதுகுறிப்பிடத்தக்கது.

ஸ்கோர்:

மும்பை: முதல் இன்னிங்ஸ் - 260; இரண்டாவது இன்னிங்ஸ் - 184 (முரளி கார்த்திக்70/9 வி)

ரெஸ்ட் ஆஃப் இந்தியா: முதல் இன்னிங்ஸ் - 389; இரண்டாவது இன்னிங்ஸ் - விக்கெட்இழப்பின்றி 58 ரன்கள்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X