தென் ஆப்பிரிக்காவில் கிருஷ்ண ரத யாத்திரை
ஜொகான்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்கத் தலைநகர் ஜொகான்னஸ்பர்க்கில் இஸ்கான் (கிருஷ்ண பக்திஇயக்கம்) அமைப்பின் ரத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜொகான்னஸ்பர்க்கில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லெநாசியா என்ற இடத்தில் இந்தரத யாத்திரை நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா முழுவதும் இருந்து சுமார் 8ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர சர்வதேச அழைப்பாளர்கள் கலந்து கொண்டு ரத யாத்திரையைச்சிறப்பித்தனர். அவர்கள் அனைவரும் சுமார் 15 மீட்டர் நீள யாத்திரையை 4கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றனர்.
லெநாசியாவில் உள்ள காந்தி அரங்கில் இந்த ரத யாத்திரை முடிவுற்றது. அன் பிறகுபாட்டு, நடனம், இசை, நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உபன்யாசங்களும்நடத்தப்பட்டன.
ஜொகான்னஸ்பர்க்கிலிருந்து 600 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டர்பன் நகரில் இந்ததேர் தயாரிக்கப்பட்டது. ரத யாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு வெஜிடேரியன்வகை உணவு தயாரித்து இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த ரத யாத்திரைக்கு லெநாசியாவில் உள்ள ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் ஏற்பாடுசெய்திருந்தனர். இந்த ஆண்டு ரத யாத்திரை சிறப்பா நடைபெற்றது. இனிஆண்டுதோறும் ரத யாத்திரை நடத்த முடிவு செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
நியூயார்க், லண்டன், மாஸ்கோ, பாரீஸ், சிட்னி ஆகிய நகரங்களுக்கு அடுத்து இஸ்கான்அமைப்பினர் ஜொகான்னஸ்பர்க்கில் ரத யாத்திரை நடத்தியுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.