ஸ்ரீமாவோ தானத்தால் கண் பெற்ற இருவர்
கொழும்பு:
இலங்கை முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகேவின் கண்கள் இரண்டுபேருக்கு பொருத்தப்பட்டது.
இலங்கை அதிபர் சந்திரிகாவின் தாயார் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா 10-ம் தேதிமரணமடைந்தார். 1972-ம் ஆண்டு தன் கண்களை தானம் செய்ய விருப்பம்தெரிவித்திருந்தார்.
அதற்கேற்ப அவர் இறந்தவுடன் அவரது இரு கண்களும் இலங்கை கண் தானசொசைட்டியில் உள்ளவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது என அதன் தலைவர்அதுகோராலா தெரிவித்தார்.
ஸ்ரீமாவோவின் கண்தானத்தால் இரண்டு பேர் கண் பார்வை பெறுகின்றனர். ஒருவர் 70வயதானவர். மற்றொருவர் 32 வயதானவர். இவர்களுக்கு கொழும்பு கண்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கண்கள் பொறுத்தப்பட்டன.
ஸ்ரீமாவோவின் கண்கள் பெறப்பட்ட சில மணி நேரங்களிலேயே அறுவை சிகிச்சைமூலம் இவர்களுக்கு கண் பொறுத்தப்பட்டது. கண்பார்வை பெற்றவர்கள் யார்என்பதை நாங்கள் வெளியிட விரும்பவில்லை. ஏனென்றால் கண்ணை தானமாகப்பெற்றவர்கள் இன்னும் மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள்.
ஆனால் சில மாதங்களுக்கு ஒரு முறை கண்தானம் செய்தவர்களுக்கு அவர்களைநாங்கள் கண் தானம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும்அப்போது அவர்களை அறிமுகம் செய்வோம் என அதுகோர்லா தெரிவித்தார்.ஐ.ஏ.என்.எஸ்.