தடையை நீக்குங்கள் ...குரோனியே வக்கீல்கள் எச்சரிக்கை
கேப்டவுன்:
குரோனியேவுக்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்ட ஆயுட்காலத் தடையைநீக்கவேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு குரோனியேவின் வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மேட்ச் பிக்ஸிங்கில்ஈடுபட்டதாக குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து மேட்ச் பிக்ஸிங்குறித்து விசாரணை நடத்த எட்வர்ட் கிங் தலைமையில் தனி விசாரணை கமிஷனை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இந் நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் விளையாட குரோனியேவுக்கு தென் ஆப்பிரிக்ககிரிக்கெட் வாரியம் ஆயுட்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து வாரியத்துக்குகுரோனியே வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
குரோனியேவுக்கு எதிராக விதிக்கப்பட்ட இத் தடை சட்டத்துக்குப் புறம்பானது.சட்டவிரோதமானது. அப்படி தடையை விலக்கிக் கொள்ளவில்லை என்றால் வாரியத்துக்குஎதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.