அமெரிக்க தேர்தல் கருத்துக் கணிப்பில் ஜார்ஜ் புஷ் முன்னிலை
வாஷிங்டன்:
அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட அதிபர் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பில் குடியரசுக் கட்சியின் சார்பில்போட்டியிடும் டெக்ஸாஸ் மாகாண கவர்னர் ஜார்ஜ் புஷ் முன்னணியில் உள்ளார்.
இப்போதைய ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் அமெரிக்கத் துணை அதிருமான அல் கோர் பின்தங்கியிருக்கிறார்.
நேற்று இருவருக்கும் இடையே 3வதும் இறுதியானதுமான தேர்தல் விவாதம் நடந்தது. இந்த விவாதம் முடிந்தவுடனேயேநாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
செயின்ட் லூயிசில் நடந்த இந்த விவாதத்தில் இரு போட்டியாளர்களிடம் பொது மக்கள் கேள்விக் கணைகளைத்தொடுத்தனர். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, ஏமனில் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது நடந்த தாக்குதல்,இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனை பற்றி ஒருவர் கூட கேள்வி எழுப்பவில்லை.
உள்நாட்டு பிரச்சனைகள் குறித்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன. மருத்துவ வசதிகள், சமூகப் பாதுகாப்பு, தேர்தலைஇளைஞர்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, குறைந்து வரும் நல்ல பழக்கங்கள் குறித்துத் தான் கேள்விகள்கேட்கப்பட்டன.