For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜே.எம்.எம்.கேஸ்: அடுத்த வாரம் அப்பீல் செய்கிறர் நரசிம்ம ராவ்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில்விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையை எதிர்த்து டெல்லிஉயர்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் அப்பீல் தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள்பிரதமர் நரசிம்மராவின் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், நரசிம்மராவின் அப்பீல் மனுதயாராக உள்ளது. தற்போது நரசிம்மராவ், பெலாலரஸ் நாட்டில் உள்ளார். அங்குநடக்கும் பொதுத் தேர்தலில் ராவும் ஒரு பார்வையாளர். புதன்கிழமை நள்ளிரவுக்குமேல்தான் அவர் இந்தியா திரும்புகிறார் என்றார் ஆனந்த்.

முன்னதாக 1988-ம் ஆண்டு லோக் சபாவில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத்தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப் போடுவதற்காக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாஎம்.பிக்களுக்கு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் பணம் கொடுத்தார் என வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கில், நரசிம்மராவ், பூட்டாசிங் ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதித்து சிபிஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X