2000-01 ஆண்டில் ஐரோப்பாவுக்கான சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.6,500 கோடி
டெல்லி:
2000-01-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான சாப்ட்வேர்ஏற்றுமதி ரூ. 6,500 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 63 சதவீதம் அதிகமாகும் என்று நாஸ்காம் (தேசியசாப்ட்வேர் மற்றும் சர்வீஸ் கம்பெனிகளின் சங்கம்) தலைவர் தேவாங் மேத்தாதெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் சாப்ட்வேர் ஏற்றுமதிசெய்வதற்கான வசதி வாய்ப்புகளையும், புதிய வழிமுறைகளையும் நாஸ்காம்தொடங்கியுள்ளது.
இந்தியாவில் சாப்ட்வேர் வளர்ச்சி குறித்து பெல்ஜியம், நார்வே நாடுகளில் நாஸ்காம்பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. இது தவிர அடுத்த ஒரு வருடத்தில் மேலும் பலகருத்தரங்குகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி மேலும்அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஐரோப்பிய நாடுகள் சாப்ட்வேர்நிபுணர்களுக்கு வொர்க் பர்மிட்டும், விசாவும் வழங்கும் நெறிமுறைகளைஎளிமைப்படுத்தியுள்ளன.
இதையடுத்து அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை நோக்கிப்படையெடுத்த இந்திய சாப்ட்வேர் நிபுணர்கள் இனி ஐரோப்பிய நாடுகளிலும்எளிதாகப் பணிபுரியமுடியும்.
தற்போது பெல்ஜியம், நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் சாட்ட்வேர்துறையில் படிப்படியாக முன்னேறி வருகின்றன. எதிர்காலத்தில் ஐரோப்பியநாடுகளுக்கு இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதி அதிகரிக்கும்.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல சாப்ட்வேர் நிறுவனங்கள், தொழில் ரீதியாகஇந்தியாவில் உள்ள பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டுள்ளன என்றார் தேவங் மேத்தா.
ஐ.ஏ.என்.எஸ்.