For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்குமார் குடும்பத்தினர் டெல்லி செல்கின்றனர்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

மனிதாபிமான அடிப்படையில் ராஜ்குமாரை விடுவிக்க முயற்சி எடுக்க வேண்டும் எனஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரை சந்தித்துவேண்டுகோள் விடுக்க ராஜ்குமார் குடும்பத்தினரும், கன்னட திரைப்படத்துறையினரும் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பனால், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 80நாட்கள் ஆகிவிட்டன. அரசு தூதர் அவரை விடுவிக்க ஐந்து முறை காட்டுக்கு சென்றுவந்துவிட்டார். ஆனால் ராஜ்குமார் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்தித்து பேசுவதாக ராஜ்குமார்குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். அவர்களை அலுவலகத்தில் சந்தித்து பேசுவதற்குநேரம் ஒதுக்குவதற்கான

ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

இந்தக குழுவில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.இதற்காக சிறப்பு ரயிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கர்நாடக திரைப்பட வர்த்தகசபைத் தலைவர் சந்திரசேகர், ராஜ்குமார் ரசிகர் சங்கத் தலைவர் கோவிந்த்,இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், எம்.பி.க்கள் அம்பரீஷ், சசிகுமார், நடிகர் நடிகைகள்இந்தக் குழுவில் கலந்து கொள்வார்கள்.

டெல்லி செல்வது எப்போது என்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் .டில்லி செல்லவிருப்பதாக உள்ள தகவலை ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் உறுதிசெய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X