இந்தியாவுக்கு போர் விமானங்கள் விற்க அமெரிக்கா எதிர்க்காது - இஸ்ரேல் நம்பிக்கை
டெல்லி:
இந்தியாவுக்கு வான் வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு பணிகளைமேற்கொள்ளும் "ஃபால்கன் விமானங்களை விற்பதை அமெரிக்கா எதிர்க்காது என்றுநம்புவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேவிட் அபெக் கூறியதாவது:
ஃபால்கன் ரக விமானங்களை விற்பது தொடர்பாக இந்தியாவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவிடமிருந்து எந்த எதிர்ப்பும் இருக்காதுஎன்று நம்புகிறோம்.
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு எந்த வகையிலும்பாதிக்கப்படாது என்றும் கருதுகிறோம். சீனாவுடனான விமான விற்பனைஒப்பந்தத்துக்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்ததை இந்தியாவுடனான விமானவிற்பனை ஒப்பந்த த்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.
சீனா உடனான ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்தற்கு, தைவான்நாட்டுடன் ஏற்பட்ட பிரச்சினைதான் காரணம். ஆனால், அதுபோன்ற ஒரு பிரச்சினைஇந்திய விவகாரத்தில் எழவில்லை.
இஸ்ரேலிடமிருந்து ஃபால்கன் விமானங்களை வாங்குவதில் இந்தியா அதிகம் ஆர்வம்காட்டுகிறது.
பயங்கரவாதத் தடுப்பு, உளவு தகவல் பரிமாற்றம் போன்றவற்றில் இணைந்துசெயல்பட இந்தியாவும் இஸ்ரேலும் உறுதி பூண்டுள்ளன. ஆனால், ஒரு நாட்டின்விவகாரத்தில் மற்றொரு நாடு தலையிடாது.
சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் பயங்கரவாத தடுப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வந்ததாக வந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறு.
மேற்கு ஆசியப் பிரச்சினையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கோரத்தான்இஸ்ரேல் அமைச்சர் ஷிமோன் பெரஸ் இந்தியாவுக்கு வந்தார்.
வன்முறைக்கு எதிரான, அமைதியை நிலைநாட்ட விரும்பும் நாட்டுக்கு ஆதரவுதரும்படி கோரப்பட்டது. இந்தியாவும் வன்முறைக்கு எதிரான அமைதியை விரும்பும்நாடுதான். ஆகவே, இந்தியா தனது கொள்கையின் அடிப்படையில் தனது ஆதரவைத்தெரிவிக்கும் என்று நம்புகிறோம்.
காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இருதரப்பு பேச்சுவார்த்தைதான். வன்முறையைக்கைவிட்டால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு என்று இந்தியா கூறியுள்ளது சரியான முடிவுஎன்றார் அபெக்.
ஐ.ஏ.என்.எஸ்.