For Daily Alerts
Just In
10 நாள் உயிருக்குப் போராடிய திமிங்கலம் கொலை
தஞ்சாவூர்:
10 நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த திமிங்கலம் கொலைசெய்யப்பட்டது.
தமிழகத்தில் வேராண்யம் அருகே கோடியக்கரையில் 10 நாட்களுக்கு முன் 40 அடிநீளமுள்ள ஒரு திமிங்கலம் உயிருடன் கரை ஒதுங்கியது.
இதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்களும்திமிங்கலத்தை கடலுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால், முடியவில்லை. அதனால், கரையிலேயே திமிங்கலம் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. தற்போது அந்த திமிங்கலம் கொலை செய்யப்பட்டுவிட்டது.
திமிங்கலத்தின் சில உடல் பகுதிகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. அதற்காக, அப்பகுதி மக்கள் திமிங்கலத்தைக் கொன்று உடல் பகுதிகளை எடுத்துச் சென்றிருக்கலாம்என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, October 19, 2000, 5:30 [IST]