For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மல்லேஸ்வரி, பீனா மோளுக்குப் பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

கொச்சி:

சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம வென்ற கர்னம் மல்லேஸ்வரிக்கும்,400 மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பீனா மோளுக்கும்வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.

கேரள மாநிலம் கொச்சியில் மலையாள மனோரமா பத்திரிகையும், நேஷனல்பானசோனிக் நிறுவனம் இணைந்து இந்த பாராட்டு விழாவை நடத்தின.

சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரே ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதைபளுதூக்கும் போட்டியில் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தது கர்னம்மல்லேஸ்வரி.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்தியப் பெண் மல்லேஸ்வரி என்பதுகுறிப்பிடத்தக்கது. அது போல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் பீனா மோள்தகுதி பெற்றார். ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றஇரண்டாவது பெண் பீனா மோள் ஆவார்.

இத்தகைய சிறப்புக்களைப் புரிந்த இருவரும் கொச்சியில் உள்ள மலையாள மனோரமாஅலுவலகத்திலிருந்து பாராட்டு விழா நடைபெற்ற ராஜீவ் காந்தி உள் விளையாட்டுஅரங்கத்துக்கு திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

ஜீப்புக்கு முன்னதாக யானைகள் அணிவகுத்து வந்தனர். பாராட்டு விழாவில்ஏராளமான பள்ளிச் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர். விழாவுக்கு எர்ணாகுளம்மாவட்ட ஆட்சியர் கே.ஆர். விஷ்வாம்பரன் தலைமை தாங்கினார்.

மலையாள மனோரமா பத்திரிகை நிர்வாக இயக்குநரும், ஆசிரியருமான பிலிப் மேத்யூமுன்னிலை வகித்தார்.

சிட்னி ஒலிம்பிக்கில் புரிந்த சாதனையைப் பாராட்டி மல்லேஸ்வரிக்கும், பீனாமோளுக்கும் நினைவுப் பரிசுகளுடன் எர்ணாகுளம் மாவட்ட விளையாட்டுக் கவுன்சில்உறுப்பினர் பதவிகளையும் வழங்கினார் விஷ்வாம்பரன்.

மலையாள மனோரமாவும் நேஷனல் பானாசோனிக் நிறுவனமும் இணைந்து நடத்தியஒலிம்பிக் கருத்துக் கணிப்புப் போட்டியில் வெற்றி பெற்ற இருவருக்கு கர்னம்மல்லேஸ்வரி பரிசுகளை வழங்கினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X