தமிழர்களை சீரழித்து விட்டது சினிமா .. ராமதாஸ் ஆதங்கம்
கரூர்:
தமிழர்களையும் அவர்களது கலாசாரம், பண்பாட்டையும் சீரழித்து விட்டது சினிமாஎன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கரூர் அருகே அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி பா.ம.க கூட்டத்தில் அவர்பேசுகையில், தமிழர்களின் கலாசாரத்தைச் சீரழித்து விட்டது சினிமா. அவர்களதுகலாசாரம், பண்பாடு ஆகியவைற்றை களங்கப்படுத்தி விட்டது சினிமா.
அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுக்குட்பட்ட பள்ளப்பட்டியில், சினிமா தியேட்டர்கள்இல்லை. சாராயக் கடை இல்லை. இப்படித்தான் ஒரு ஊர் இருக்க வேண்டும்.தமிழகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது பள்ளப்பட்டி.
பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்து வரும் கட்சி. பெரிய கட்சிகளுடன் சேர்ந்துதான்தேர்தலில் போட்டியிட முடியும். அப்போதுதான் சட்டசபைக்கும், லோக் சபாவுக்கும்மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும்.
திமுக, அதிமுக ஆகியவைதான் தமிழகத்தில் பெரிய கட்சிகள் இக்கட்சிகளுடன்சேர்ந்துதான் எந்தக் கட்சியும் தேர்தலைச் சந்திக்க முடியும். பெரிய கட்சிகளானகாங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளுமே இக்கட்சிகளுடன் கூட்டு சேர்ந்துதான்போட்டியிடுகின்றன.
கேரளாவைப் போல தமிழகத்திலும், முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை விரைவில்தமிழக முதல்வர் கருணாநித அறிவிப்பார் என்று நம்புகிறேன்.
தமிழகத்தில் உள்ள60 கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு உள்ளது என்றார் அவர்.