For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளை அறிக்கை கேட்கிறது த.மா.கா.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது நாடகமோ என்று உச்ச நீதிமன்றமே சந்தேகம்எழுப்பியுள்ளதால், வீரப்பன் விவகாரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கைவெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து த.மா.கா. பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

வீரப்பனை முகமூடியாக வைத்து தீவிரவாத இயக்கங்கள் இன்னும் என்னென்னகோரிக்கைகளை வைப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. விடுதலைப்புலிகள்ஆதரவாளரான நெடுமாறனை காட்டுக்குள் அனுப்பும் அவசியம் என்ன?

நெடுமாறன் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ள விரும்பாதவர். அவரையும்,அவரது ஆதரவாளர்களையும் அனுப்பியது ஏன் என்பதற்கு தமிழக அரசிடமிருந்துபதில் இல்லை.

நெடுமாறனை காட்டுக்குள் அனுப்ப அவரிடம் 2 பேர் எடுத்துச் சொன்னதாக தகவல்உள்ளது. அதில் ஒருவர் பெங்களூரைச் சேர்ந்த ரங்கநாத். இவர் ராஜீவ்கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து 8 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்.

நெடுமாறன் அரசு தூதர் இல்லை என்றும், கோபாலுடன் போனதால் அவரும் தூதர்தான் எனறும், வீரப்பன் கேட்டுக் கொண்டதால் நெடுமாறன் போனார் என்றும்முன்னுக்குபின் முரணாக கருணாநிதி பேசுகிறார்.

நெடுமாறனை அனுப்ப கர்நாடக முதல்வரிடம் ஒப்புதல் பெற நக்கீரன் இணைஆசிரியர் காமராஜை கருணாநிதி அனுப்பியுள்ளார். இரு மாநில அரசு எடுக்கும் இந்தமுயற்சிக்கு காமராஜை ஏன் அனுப்பினார்? முதல்வரின் இந்த செயல் பொறுப்பற்றது.

மதுரையில் நெடுமாறன் நடத்திய மாநாட்டில் பங்கேற்ற 100 பேர் இப்போதுகாட்டுக்குள் சென்று விட்டனர். வீரப்பனுடன் அவர்கள் வருங்கால செயல் திட்டம்பற்றி விவாதித்து வருகின்றனர். ஆனால், அதிரடிப்படையினர் காட்டுக்குள் செல்லக்கூடாது என்று வெளியில் நிறுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயல்களுக்குகருணாநிதி துணை போவது ஏன்?

கர்நாடக முதல்வர் பல முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். ஆனால்,கருணாநதி கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறார். மக்கள் மத்தியில் உள்ளசந்தேகத்தை போக்கும் வகையில் தமிழக அரசு வீரப்பன் விவகாரம் தொடர்பாகவெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் தீவிரவாதிகளுக்கும், திமுகவுக்கும் நெருங்கியதொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகம் காரணமாகவே முந்தைய ஐக்கிய முன்னணிஅரசு பதவி இழக்க நேர்ந்தது. இதை கருணாநிதி மறந்து விட வேண்டாம் என்றார்எஸ்.ஆர்.பி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X