நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பில் ரூ.503 கோடி குறைந்தது
மும்பை:
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பில் மேலும் ரூ.503 கோடி குறைந்தது.
இந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவிடம்உள்ள அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.1,62,437 கோடியாகும். இது அதற்குமுந்தைய வாரத்தை விட ரூ.503 குறைவாகும்.
முந்தைய வாரத்தில் இந்தியாவிடம் ரூ.1,62,940 கோடி அளவுக்கு அன்னியச்செலாவணி கையிருப்பில் இருந்தது. தொடர்ந்து அன்னியச் செலாவணி கையிருப்புகுறைந்து கொண்டே வருகிறது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் இருப்பு குறைந்தபோது இது தாற்காலம்தான். விரைவில் அன்னியச்செலாவணி கையிருப்பு அதிகரிக்கும். அதற்கான முயற்சியில் மத்திய அரசுஈடுபட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆனால், தங்கம் கையிருப்பு சீராக உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியிடம் ரூ.13,057கோடி அளவுக்குத் தங்கம் கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.