ஷார்ஜா கிரிக்கெட்: இந்தியாவை வென்றது இலங்கை
ஷார்ஜா:
ஷார்ஜா கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில்இந்தியாவைத் தோற்கடித்தது.
கோக-கோலா நிறுவனம் நடத்தும் இப்போட்டித் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்றுவருகிறது. வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும்மோதின.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்தது.
இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக ஆடி 101 ரன்கள் எடுத்தார். ஒரு நாள்போட்டியில் டெண்டுல்கர் அடித்த 26-வது சதமாகும் அது. அவருக்கு அடுத்து ராபின்சிங் நின்று ஆடி 35 ரன்கள் எடுத்தார்.
50 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இலங்கைதனது இன்னிங்ஸைத் தொடங்கியது.
தொடக்கமே அந்த அணிக்கு பெருத்த அடியாக இருந்தது. அணியின் எண்ணிக்கை 17ஆக இருந்தபோது தொடக்க ஆட்டக்காரர் குணவர்த்தனே அவுட்டானார்.
அடுத்து வந்த அட்டபட்டுவும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். 21 ரன்களில் 2விக்கெட்டுகளை இழந்து இலங்கை தவித்தது.
ஆனால், கேப்டனும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரருமான ஜெயசூர்யாவும், அடுத்துவந்த ரஸல் அர்னால்டும் நின்று ஆடினர். ஜெயசூர்யா வழக்கமான தனது அதிரடிஆட்டத்தைக் கையாண்டார்.
ஜெயசூர்யா 48 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். அர்னால்டு 59 ரன்கள்எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ஜெயவர்த்தனே, சங்காகரா ஆகியோரும் நின்றுஆடி தங்களது பங்குக்கு ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
ஜெயவர்த்தனே 38 ரன்கள் எடுத்தார். சங்காகரா 40 ரன்கள் எடுத்து கடைசி வரைஅவுட்டாகாமல் இருந்தார்.
இறுதியில் 43.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றிபெற்றது. இந்திய அணியில் அகார்கர், பிரசாத் இருவரும் 2 விக்கெட்டுகளைவீழ்த்தினர்.
சதமடித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையும், ஜிம்பாப்வேயும் மோதுகின்றன.இந்தியா அடுத்து 22-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை எதிர்த்துவிளையாட உள்ளது.
ஸ்கோர்:
இந்தியா - 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் (டெண்டுல்கர் 101ரன்கள்).
இலங்கை - 43.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள்.