காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் - அத்வானி, பெர்னான்டஸ் ஆய்வு
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அம் மாநிலசட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறைஅமைச்சர் எல்.கே. அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்இருவரும் ஸ்ரீநகர் விரைந்துள்ளனர்.
இக் கூட்டத்துக்கு மாநில முதல்வர் பரூக் அப்துல்லா ஏற்பாடு செய்துள்ளார். மத்தியஅமைச்சர்கள் விவாதிக்க வரவுள்ளதால் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தபிறகு ஸ்ரீநகரிலேயே தங்கியிருக்கும்படி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை பரூக்அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் ஸ்ரீநகரிலேயே தங்கியுள்ளனர். இவர்களுடன்காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்தியஅமைச்சர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக ஆலோசனை நடத்துகின்றனர்.
ஆலோசனை நடத்திய பிறகு அன்று இரவு அமைச்சர்கள் இருவரும் தலைநகர் டெல்லிதிரும்புகின்றனர். அதன்பிறகு பிரதமர் உள்பட அமைச்சரவைச் சகாக்களுடன் அவர்கள்ஆலோசனை நடத்துவார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.ஏ.என்.எஸ்.