புதுவையில் டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கொலை
புதுவை:
புதுவையில் டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கத்தியால் குத்திக் கொலைசெய்யபட்டார். அவரது மகன் காயமடைந்தார்.
இது பற்றி கூறப்படுவதாவது:
புதுவை உப்பளம் பகுதியைச் சேர்ந்தவர் கிளமெண்ட். 59 வயதான இவர் டிராவல்ஏஜென்சி நடத்தி வந்தார். சனிக்கிழமை இரவு இவரது வீட்டுக்கு ஒரு கும்பல் வந்தது.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கிளமெண்ட் கதவைத் திறந்தார். உடனே அக் கும்பல்தன்னிடம் இருந்த கத்தியால் கிளமெண்ட்டைக் குத்தியது.
கிளமெண்ட் போட்ட கூச்சலைக் கேட்டு ஓடிவந்த அவரது மகன் சுரேஷையும் அக்கும்பல் தாக்கியது. சம்பவ இடத்திலேயே கிளமெண்ட் குடல் சரிந்து இறந்தார்.
படுகாயமடைந்த சுரேஷ், புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கிளமென்டைக் கொலை செய்த கும்பலின் அடையாளம் தெரியவில்லை.
கொலைக்கான காரணம் தெரியவில்லை. உப்பளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.