For Daily Alerts
Just In
"பிக் பாக்கெட் கோஷ்டி தாக்கி வாலிபர் சாவு
திருப்பூர்:
திருப்பூரில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பிக் பாக்கெட் அடிக்கும் நபர்களுக்கும்,பஸ் பயணிக்கும் நடந்த மோதலில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூரில் கடந்த 21-ம் ததி இரவு பிக்பாக்கெட் கோஷ்டி ஒன்று தனது "தொழிலைகவனித்து வந்தது. அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரிடம் தனது கை வரிசையைக்காட்டியுள்ளது. சுதாரித்துக் கொண்ட வாலிபர், எதிர்ப்புத் தெரிவிக்கவே,கோபமடைந்த அந்தக் கும்பல், கத்தியால் குத்தியுள்ளனர்.
படுகாயமடைந்த வாலிபர் அந்த இடத்திலேயே இறந்து போனார். கொலை செய்தபிக்பாக்கெட் கோஷ்டி தலைமறைவானது.
வாலிபரின் சட்டைப் பாக்கெட்டில், "பாஸ்கரன், உக்கடம் என எழுதப்பட்ட காகிதம்இருந்தது. இது அவருடைய பெயரா, அவர் கோவையைச் சேர்ந்தவரா என்பது பற்றிபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
Story first published: Monday, October 23, 2000, 5:30 [IST]