புதிய நீதிக் கட்சியின் முதல் நீக்கம்
சென்னை:
புதிய நீதிக் கட்சியின் முக்கிய உறுப்பினரான என்.வி.என். செல்வம், கட்சி விரோதநடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
என்.வி.என்.சோமு, முன்னாள் திமுக அமைச்சர் என்.வி.என்.சோமுவின் மகன் என்பதுகுறிப்பிடத்தக்கது. சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தபோதுசெல்வம் நீக்கப்பட்டதை, கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
சண்முகம் தொடர்ந்து பேசுகையில், திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர்கண்ணன் ஆகியோர் கட்சியில் இணைந்துள்ளனர்.
எங்களது கட்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த தேர்தலில் நாங்கள்மூன்றாவது அணியை அமைக்க மாட்டோம். நாங்களே முதல் அணியாக உருவாகி,ஆட்சியைப் பிடிப்போம். நாங்கள் ஆட்சி அமைக்க எந்த திராவிடக் கட்சியும்தேவையில்லை.
ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்ஜி.கே.மூப்பனாருடன் பேசினேன். ஆனால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை.
கூட்டணி தொடர்பாக பிற கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருவது குறித்து இப்போதுதெரிவிக்க ஏதுமில்லை.
புதிய கூட்டணி தொடர்பான இறுதி வடிவம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில்தெரிய வரும் என்றார்.
பேட்டியின்போது, கட்சியின் புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலையும்ஏ.சி.சண்முகம் வெளியிட்டார்.
யு.என்.ஐ.