பணியின் போது இறந்த சிறுமி குடும்பத்துக்கு இழப்பீடு
கோவை:
திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் இயந்திரத்தில் சிக்கி இறந்த சிறுமிக்கு ரூ. 2 லட்சரூபாய் நஷ்ட ஈடு வழங்க தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பூர் நகரில் பனியன் தொழிற்சாலைகளில் சிறுவர்கள் அதிகம் வேலைசெய்கின்றனர். இந்த குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் உட்பட அரசு நிறுவனங்களும் அக்கறை செலுத்தி வருகின்றன.
கடந்த 1998-ம் ஆண்டு ஒரு பனியன் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 14 வயதுசிறுமி பானு, இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சிறுமி, ஓவர் லாக் இயந்திரத்தில்வேலை பார்த்து வந்தார். இவரது பெற்றோர்கள் தாராபுரம் அருகே விவசாயம் செய்துவருகின்றனர்.
தொழிற்சாலை நிர்வாகத்தினர் சிறுமி உயிரிழப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடுவழங்குவதாக சமரச முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூரில் பிரச்சாரத்தில்ஈடுபட்டிருந்த குழந்தைத் தொழிலாளர் கல்வி வளர்ச்சி மையம் என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் இது பற்றிக் கேள்விப்பட்டது.
பானுவின் பெற்றோர்களை அழைத்துப் பேசிய பின்னர், தொழிலாளர் நல வாரியத்தில்புகார் செய்தது. இந்த புகாரின் பேரில், தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அஸ்வின் நிட்டிங் கம்பெனி நிர்வாகம், இறந்துபோன சிறுமி பானுவின் குடும்பத்தினருக்கு 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடுவழங்க உத்தரவிட்டார்.