கோவை உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி
கோவை:
கோவை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கோவை மாவட்டத்தில் பல ஊராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர் பதவி காலி இடங்களுக்கான தேர்தல்நடந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் தோல்வி அடைந்தனர். மாவட்ட ஊராட்சி மன்றஉறுப்பினர் பதவிக்கான 10-வது வார்டுக்கான தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. வைச் சேர்ந்த பி.நடராஜன் வெற்றி பெற்றார். இவர் 12 ஆயிரத்து 435 ஓட்டுகள்பெற்றார். தி.மு.க.வேட்பாளர் பழனிச்சாமி 12 ஆயிரத்து 435 ஓட்டுகள் பெற்றார். ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ்கட்சிக்கு 128 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று பொள்ளாச்சி அருகே உள்ள ஏ. நாகூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட ரத்தினசாமி வெற்றி பெற்றார். இவர் 19 ஆயிரத்து 927 ஓட்டுகள் பெற்றார். இவரையடுத்துபா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தர்மலிங்கம் 13 ஆயிரத்து 324 ஓட்டுகள் பெற்றார்.
நரசிபுரம், தீத்திபாளையம், தொண்டாத்தூர் ஆகிய ஊராட்சிகளில் நடந்த தலைவர்களுக்கான தேர்தலில் தி.மு.கவெற்றி பெற்றுள்ளது.
ராமபட்டிணம் ஊராட்சி மன்றத் தலைவராக ம.தி.மு.க. வேட்பாளர் முருகன் வெற்றி பெற்றுள்ளார். பல வார்டுகளில்நடந்த தேர்தல்களில் ஒரு மனதாக வேட்பாளர்கள் பலர் தேர்வு பெற்றுள்ளனர்.