"தீவிரவாதிகளைத் தூண்டி விடுகிறார் அராபத்
வாஷிங்டன்:
இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் போரிடுவதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதீவிரவாதிகளை பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் விடுதலை செய்துள்ளார் என்றுஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் செய்திவந்துள்ளது.
ஹமாஸ் மற்றம் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பினருக்கு, சமீபத்திய இஸ்ரேல் தாக்குதல்தொடர்பாக முடிவெடிக்கும் அதிகாரத்தையும் அராபத் வழங்கியுள்ளார் என்றும் அந்தசெய்தியில் உள்ளது. இரு பிரிவினரும் முன்பு அராபத் தலைமறைவு வாழ்க்கைநடத்தியபோது பெரிதும் உதவியாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் ராணுவத்தின் தீவிர தாக்குதலில் இதுவரை 131 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள் அல்லது இஸ்ரேலியஅரேபியர்கள். கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும்,பாலஸ்தீனியர்களுக்கும்இடையே கடும் மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் பிரிவு செய்தித்தொடர்பாளர் மஹமூத் அல் ஸஹார் கூறுகையில், ஹமாஸ்தலைவர்களும், இஸ்லாமிக் ஜிஹாத் தலைவர்களும் அடிக்கடி கூடி பேசுகின்றனர்.பாலஸ்தீன நிர்வாக அதிகாரிகளுடனும் அவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகின்றனர். யாசர் அராபத்தின் கட்சியுடனும் தொடர்பு வைத்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத் தாக்குதலுக்கு எதிராக நடத்த வேண்டிய தாக்குதல் குறித்து தினசரிஒருமுறையாவது கூடிப் பேசி முடிவெடுக்கிறோம் என்று அவர் கூறினார்.
யு.என்.ஐ.