For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைப் புலிகளுக்கு பணம் தருகிறார் ராமதாஸ் மகன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி, விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்துள்ளார் என்று வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன்புகார் கூறியுள்ளார்.

வன்னியர் சங்கத்தின் பெயரும், கொடியும் மாற்றப்பட்டுள்ளது. இப்போது இதுவன்னியர் நலச் சங்கம்.

இந்த மாற்றத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் நடராஜன் பேசுகையில், ராமதாஸ் மகன்அன்புமணி சமீபத்தில் ஜெர்மனிக்குப் போனார். அங்குள்ள ஒரு வங்கியில் விடுதலைப்புலிகளுக்காக பணத்தை முதலீடு செய்யப் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்துசி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

நான் பாட்டாளி மக்கள் கட்சியில் சேரப் போவதாக பொய்யான வதந்திகளை ராமதாஸ்பரப்பி வருகிறார். இதன் மூலம் கேவலமான அரசியல் நடத்துகிறார்.

சட்டசபைத் தேர்தலில் வன்னிய சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில்வன்னியர்களையே வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் வடபகுதியில் வன்னியர்களே அதிகம் உள்ளனர். ஆனாலும் அவர்கள் பல வழிகளில்புறக்கணிக்கப்படுகின்றனர்.

வன்னியர்களைப் புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளை நாங்கள் புறக்கணிப்போம்என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X