புதிதாக பிறக்கும் மாநிலங்களுக்கு கவர்னர்கள் அறிவிப்பு
டெல்லி:
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டீஸ்கர், உத்தாரஞ்சல், ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான கவர்னர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 25 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. தற்போது புதிதாக மூன்று மாநிலங்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மத்தியப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து சட்டீஸ்கர் என்ற மாநிலமும், உ.பி. மாநிலத்தைப் பிரித்து உத்தாரஞ்சல் மாநிலமும், பீகாரைப் பிரித்து ஜார்கண்ட்மாநிலமும் உருவாக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சட்டீஸ்கர் மாநிலம் செயல்படத் துவங்கும். ஜார்க்கண்ட் மாநிலம் நவம்பர் 9 ம் தேதியும், உத்தராஞ்சல் மாநிலம்நவம்பர் 15 ம் தேதியும் செயல்படத் தொடங்கும்.
மூன்று புதிய மாநிலங்களுக்கும் கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநில கவர்னராக தினேஷ் நந்தன் சஹாயா பொறுப்பேற்கவுள்ளார்.
அமைச்சரவை செயலாளர் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழ ஓய்வு பெறும் பிரபாத் குமார் ஜார்க்கண்ட் மாநில புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், அகாலி தள கட்சியின் மூத்த தலைவருமான சுர்ஜித் சிங் பர்னாலா உத்தராஞ்சல் மாநிலத்தின் கவர்னராகபதவியேற்கவுள்ளார். இவர் முன்பு தமிழக கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.