மனைவிக்கு ஜெயசூர்யா கொடுத்த பிறந்த நாள் பரிசு
துபாய்:
மனைவியின் பிறந்தநாளுக்கு இதை விட பெரிய பரிசை இலங்கை கிரிக்கெட் அணிகேப்டன் ஜெயசூர்யா அளிக்க முடியுமா என்பது சந்தேகமே.
அந்த அளவுக்கு ஷார்ஜாவில் நடைபெற்ற கோக-கோலா கோப்பைக்கானஇந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அந்தஆட்டத்தில் அவர் 189 ரன்கள் எடுத்தார்.
ஷார்ஜா போட்டிக்கு தனது மனைவி சான்ட்ராவையும் ஜெயசூர்யா அழைத்துவந்திருந்தார். இறுதி ஆட்டம் நடைபெற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுதான்சான்ட்ராவின் பிறந்தநாள்.
இறுதி ஆட்டத்தைக் காண மைதானத்துக்கு சான்ட்ரா வந்திருந்தார். தனது பிறந்தநாளுக்கு கணவர் என்ன பரிசு தரப்போகிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தார்அவர்.
ஆனால், இந்திய பந்து வீச்சாளர்களை சின்னாபின்னப்படுத்தி உலக சாதனையைநெருங்கி 189 ரன்கள் எடுத்து அதை தனது மனைவிக்கு பிறந்த நாள் பரிசாகசமர்ப்பித்ததை சொல்லாமல் சொல்லிவிட்டார் ஜெயசூர்யா.
சான்ட்ராவும், அந்த பிறந்த நாள் பரிசை மனமுவந்து ஏற்றுக் கொண்டார். ஆமாம்,இதுதான் எனக்குக் கிடைத்த பிறந்த நாள் பரிசுகளிலேயே மிகச் சிறந்தது என்று அவர்கூறியுள்ளார்.
ஜெயசூர்யாவும், சான்ட்ராவும் முதல்முதலாக சந்தித்ததிலிருந்தே இருவரும் ஒருவரைஒருவர் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். நான் ஒரு கிரிக்கெட் ரசிகை. ஜெயசூர்யாவைமுதன்முதலாக சந்தித்ததிலிருந்து அவரை நான் விரும்ப ஆரம்பித்துவிட்டேன் என்றார்சான்ட்ரா.