ஏ.சி. இயந்திரம், கலர் டிவி தயாரிப்பில் இறங்குகிறது டி-சீரீஸ்
டெல்லி:
டி-சீரீஸ் என்ற பெயரில் ஆடியோ கேசட்டுகளைத் தயாரித்து விற்கும் சூப்பர் கேசட்ஸ்இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குளிர்சாதனப் பெட்டிகள் (ஏ.சி.) மற்றும் கலர் டிவிக்களைத்தயாரிக்க முடிவு செய்துள்ளது.
சுமார் ரூ. 350 கோடி மதிப்புள்ள சூப்பர் கேசட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சி-சீரீஸ்கேசட்டுகள் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்றன. இந் நிறுவனத்தின்உரிமையாளர் குல்ஷன் குமார், மும்பை மாஃபியா கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெச்.எம்.வி. போன்ற கேசட்டுகள் அமோகமாக விற்பனை ஆன காலத்தில் டி-சீரீஸ்கேசட்டுகளை தைரியமாக அறிமுகப்படுத்தியவர் குல்ஷன் குமார். இப்போதுஇந்தியாவில் அதிகம் விற்பனை ஆவது டி-சீரீஸ் கேசட்டுகள்தான்.
கேசட் தயாரிப்பு தவிர அடுத்த நிதி ஆண்டு முதல் குளிர்சாதனப் பெட்டிகளைத்தயாரிக்கவும் சூப்பர் கேசட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது தவிர,சீனாவைச் சேர்ந்த சிசுவான் சாங்ஹோங எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்துஇந்தியாவில் கலர் டிவி தயாரிப்பிலும் ஈடுபட அந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டிவி தயாரிப்பது தொடர்பாக சீனா நிறுவனத்துடனும், குளிர்சாதனப் பெட்டிகள்தயாரிப்பது தொடர்பாக பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டுவருவதாக சூப்பர் கேசட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்தெரிவித்தார்.
குளிர்சாதனப் பெட்டிகள் அடுத்து நிதி ஆண்டிலிருந்து தயாரிக்கப்படும். ஆனால், கலர்டிவிக்கள் நடப்பு ஆண்டின் இறுதியிலிருந்தே தயாரிக்கப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.