For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஜெருசேலம்:

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர். மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில்தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் இதுவரை 154 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில்பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனர்கள். தொடர்ந்து வரும் மோதலைத் தவிர்ப்பதற்காக, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஷிமோன் பெரஸ், அராபத்துடன்அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் எஹூத் பராக் கூறுகையில், புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்கும், இஸ்ரேல்வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.

பாலஸ்தீனர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இனிமேலும் அவர்களது தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இஸ்ரேல்ராணுவத்தின் வலிமை பாலஸ்தீனர்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். இஸ்ரேல் வீரர்களையும், குடிமக்களையும் காப்பாற்ற மிகக் கடுமையானநடவடிக்கையையும் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்.

கடந்த வாரம் பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத்துடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினேன். அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியையேத் தழுவியதுஎன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X