For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்ச் பிக்ஸிங்: ஒரு சி.பி.ஐ டைரிக் குறிப்பு ..

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளால்கூறப்பட்ட குற்றச்சாட்டுகளால் இந்திய கிரிக்கெட் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

முதன் முதலாக இத்தகைய குற்றச்சாட்டைக் கூறியது இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர். அதன் பிறகு பல்வேறு சமயங்களில் பல்வேறு வீரர்கள்,கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.கடந்த 6 மாதம் தீவிரமாகவும், விரிவாகவும், முழுமையாகவும் விசாரணை நடத்தியசிபிஐயின் விசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு கூறப்பட்டதிலிருந்து இப்போது சிபிஐ அறிக்கைவெளியிடப்பட்டது வரை நடந்த சம்பவங்கள் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. அதன்விவரம்:

ஏப்ரல் 7 : மேட்ச் பிக்ஸிங் ஊழலை டெல்லி போலீஸார் வெளிப்படுத்தினர். தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குரோனியோ உள்பட மேலும் 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள்மீதும் இரண்டு இந்திய கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு.

ஏப்ரல் 28: மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு.

ஏப்ரல் 30: மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்காக ஸ்காட்லாந்து யார்டுபோலீஸார் இந்தியா வருகை. சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு.

மே 1: மேட்ச் பிக்ஸிங் குறித்து வழக்குப் பதிவு செய்து சிபிஐ தனது முதற்கட்டவிசாரணையைத் தொடங்கியது.

மே 4: கபில்தேவ் தனக்கு ரூ. 25 லட்சம் கொடுக்க முன் வந்ததாக மனோஜ் பிரபாகர்தன்னிடம் கூறியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர்பிந்த்ரா தகவல். இக் குற்றச்சாட்டை மறுத்தார். செய்தியாளர் கூட்டத்தில் கண்ணீர் விட்டார்கபில்தேவ்.

மே 6: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு லஞ்சம் கொடுக்கமுன் வந்தது உண்மை என்று மனோஜ் பிரபாகர் அறிவித்தார். ஆனால், பெயரைஅறிவிக்கவில்லை.

மே 11: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கபில்தேவ் தொடர இந்தியகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு.

மே 12: சிபிஐ வெளி நபர்களிடம் தனது விசாரணையைத் தொடங்கியது.

மே 13: விசாரணைக்கு வரும்படி மனோஜ் பிரபாகருக்கு சிபிஐ உத்தரவு.

மே 15: சிபிஐ முன் பிந்த்ரா ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். 360 பக்கஅறிக்கையையும் சிபிஐயிடம் அவர் சமர்ப்பித்தார்.

மே 16: பிந்த்ரா சமர்ப்பித்த அறிக்கையை சிபிஐ ஆராய்ந்தது. இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படும் விதம் குறித்த தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியதுசிபிஐ.

மே 18: பிந்த்ரா சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கு விளக்கம்அளிக்கும்படி பிந்த்ராவுக்கு சிபிஐ கோரிக்கை.

மே 20: இந்திய அணியின் முன்னாள் மேலாளர் அஜித் வடேகரிடம் மும்பையில் சிபிஐவிசாரணை.

மே 22: சிபிஐ முன் ஆஜராக கால அவகாசம் கோரினார் மனோஜ் பிரபாகர்.

மே 23: சிபிஐ முன் நவ்ஜோத் சிங் சித்து ஆஜராகி வாக்குமூலம். பிந்த்ரா கூறிய தகவல்குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றார்.

மே 24: சிபிஐ முன் மனோஜ் பிரபாகர் ஆஜரானார். இன்டர்நெட் தளத்துக்குபேட்டியளித்தார். கபில்தேவ் தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது உண்மை என்றுதெரிவித்தார். இதற்கு மோங்கியா, சித்து, பிரசாந்த் வைத்தியா ஆகியோர் சாட்சி என்றார்.மேலும் அச் சம்பவம் பற்றி அசாருதீன், ரவி சாஸ்திரி, அஜீத் வடேகர், கவாஸ்கர்ஆகியோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.

மே 25: கபில்தேவ் லஞ்சம் கொடுக்க முன் வந்தது பற்றி என்னிடம் பிரபாகர் கூறினார்என்று ரவி சாஸ்திரி லண்டனில் தெரிவித்தார். மற்றவர்கள் அச் சம்பவம் பற்றி தெரியாதுஎன்று கூறிவிட்டனர்.

மே 28: மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரபாகர். இந்தியாவில் மேட்ச் பிக்ஸிங்,பெட்டிங் குறித்து கிரிக்கெட் வீரர்களிடம் எடுத்த பேட்டி அடங்கிய விடியோ கேசட்டைவெளியிட்டார். அசார், ஜடேஜா ஆகியோருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புஇருப்பது தெரியவந்தது.

மே 30: மும்பை, டெல்லி நகரங்களில் உள்ள கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் சிபிஐவிசாரணை.

ஜூன் 2: கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின்வங்கிக் கணக்குகளைப் பரிசோதிக்க சிபிஐ முடிவு.

ஜூன் 3: தன்னிடமிருந்து விடியோ கேசட்டுகளை சிபிஐயிடம் மனோஜ் பிரபாகர்ஒப்படைத்தார்.

ஜூன் 5: விடியோ கேசட்டுகளை சிபிஐ பரிசோதித்தது.

ஜூன் 9: பிரபாகர் பேட்டி எடுத்த கிரிக்கெட் வீரர்களுக்கு சிபிஐ சம்மன். விசாரணைக்குவரும்படி அழைப்பு.

ஜூன் 11: கிரிக்கெட் வீரர் அஜய் சர்மா இந்தியாவில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கானமுக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ தகவல்.

ஜூன் 12: சித்து மீண்டும் சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம். பிரபாகர் கூறியகுற்றச்சாட்டுகள் குறித்தும், விடியோ கேசட்டில் இருப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

ஜூன் 13: விக்கெட் கீப்பர் நயன் மோங்கியா சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம்.பிரபாகரின் குற்றச்சாட்டை மறுத்தார்.

ஜூன் 15: முகேஷ் குப்தா என்ற கிரிக்கெட் சூதாட்டக்காரரிடம் என்னை முதன் முதலாகஅறிமுகப்படுத்தியது அசாருதீன்தான் என்றார் குரோனியே.

ஜூன் 16: குப்தா பற்றி தகவல்களைச் சேகரித்தது சிபிஐ. தெற்கு டெல்லியில் நகைக் கடைவைத்திருப்பவர்தான் குப்தா என்று சிபிஐ கண்டுபிடித்தது.

ஜூன் 19: பிரசாந்த் வைத்தியா சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம். பிரபாகரின்குற்றச்சாட்டை மறுத்தார்.

ஜூன் 20: சிபிஐ முன் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் அஜித் வடேகர்.தன்னிடம் பிரபாகர் பேசியது எதுவும் நினைவில்லை என்று மறுத்தார்.

ஜூன் 22: அசாருதீனிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை. மேட்ச் பிக்ஸிங்கில் தனக்குத்தொடர்பில்லை என்று மறுத்தார் அசாருதீன்.

ஜூன் 28: கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தா பிடிபட்டார். அவரிடம் வாக்குமூலம்பெற்றது சிபிஐ.

ஜூன் 29: நிகில் சோப்ராவிடம் சிபிஐ விசாரணை. மேட்ச் பிக்ஸிங்கில் ஈடவில்லை என்றுமறுத்தார் நிகில் சோப்ரா.

ஜூலை 1: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிசியோதெரபிஸ்ட் அலிஇராணியிடம் சிபிஐ விசாரணை.

ஜூலை 4: பிரபாகரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை. அவர் கொடுத்த விடியோ கேசட்டுகள்உண்மையானதுதானா என்று பிரபாகரிடம் விளக்கம் கேட்டது சிபிஐ.

ஜூலை 16: அஜய் ஜடேஜாவிடம் சிபிஐ விசாரணை.

ஜூலை 20: கிரிக்கெட் வீரர்கள், வாரிய அதிகாரிகள், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களில்வீடுகளில் வருமான வரித் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை.

ஜூலை 22: வருமான வரித் துறை சோதனை தொடர்ந்தது. வங்கி லாக்கர்கள்சீலிடப்பட்டன. ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வருமான வரித் துறைஅதிகாரிகளுடன் சேர்ந்து சிபிஐ அதிகாரிகளும் ஆவணங்களைப் பரிசோதித்தனர்.

ஜூலை 24: அஜய் சர்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக இரண்டு பேர் கொண்ட சிபிஐகுழு லண்டன் சென்றது. ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

ஜூலை 28: அஜய் சர்மாவிடம் சிபிஐ குழு விசாரணை. கிரிக்கெட் வீரர்களுக்கும்,சூதாட்டக்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான தகவல்கள் கிடைத்தன.அசாருதீனுக்கும் சூதாட்டக்காரர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக அஜய்சர்மா தெரிவித்தார்.

ஆகஸ்ட் 1: ஜடேஜா, கபில்தேவ் ஆகியோரது வங்கி லாக்கர்களைத் திறந்து சிபிஐசோதனை.

ஆகஸ்ட் 4: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா, செயலர்லேலே, பொருளாளர் கிஷோர் ருங்தா ஆகியோர் சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம்.

ஆகஸ்ட் 14: முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும்உள்ள ரவி சாஸ்திரியிடம் சிபிஐ விசாரணை. பிரபாகரின் குற்றச்சாட்டை ஆமோதித்தார்.

ஆகஸ்ட் 16: வருமான வரிச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களைபரிசோதனை செய்தது சிபிஐ.

ஆகஸ்ட் 17: கிரிக்கெட் வாரியப் பொருளாளர் ருங்தா சிபிஐ முன் மீண்டும் ஆஜராகிவாக்குமூலம்.

ஆகஸ்ட் 18: மேட்ச் பிக்ஸிங் பற்றி ஒரு வழக்கோ அல்லது முதல் தகவல் அறிக்கையோபதிவு செய்யப்படாது, விசாரணை முடிந்தவுடன் விசாரணை அறிக்கை மத்திய அரசிடம்சமர்ப்பிக்கப்படும் என்று சிபிஐ அறிவித்தது.

ஆகஸ்ட் 31: அஜய் சர்மாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை. பொய் கண்டறியும்சோதனையில் ஈடுபடும்படி மனோஜ் பிரபாகரிடம் சிபிஐ கோரிக்கை. ஆனால், அச்சோதனையில் ஈடுபட மனோஜ் பிரபாகர் மறுப்பு. மற்றவர்களுக்கும் அச் சோதனைநடத்தப்படவேண்டும் என்றார் அவர்.

செப்டம்பர் 7: சிபிஐ முன் ஆஜரானார் கபில்தேவ். தன் மீதான குற்றச்சாட்டுகளைமறுத்தார்.

செப்டம்பர் 12: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்கபில்தேவ்.

செப்டம்பர் 15: சிபிஐ அறிக்கையில் ஓரிரு இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ இயக்குநர் ஆர்.கே. ராகவன் சூசகத் தகவல்.

செப்டம்பர் 16: மாதக் கடைசியில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்என்று சிபிஐ தெரிவித்தது.

செப்டம்பர் 17: தென் ஆப்பிரிக்காவில் மேட்ச் பிக்ஸிங் பற்றி விசாரித்து வரும் எட்வர்ட்கிங் கமிஷனின் வழக்கறிஞர் ஷாமிலா பதோஹி விசாரணை நடத்துவதற்காக இந்தியாவந்தார்.

செப்டம்பர் 19: டெல்லி போலீஸாருடன் ஷாமிலா பதோஹி ஆலோசனை.

செப்டம்பர் 20: சிபிஐ உயர் அதிகாரிகளுடன் ஷாமிலா பதோஹி சந்திப்பு.

செப்டம்பர் 22: மத்திய அரசிடம் சிபிஐ விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு தள்ளிவைப்பு.

அக்டோபர் 3: இம் மாதத்தில் விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்என்று சிபிஐ அறிவிப்பு.

அக்டோபர் 10: மாதத்தின் மூன்றாவது வாரத்தில் சிபிஐயின் விசாரணை அறிக்கை மத்தியஅரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவித்தன.

அக்டோபர் 20: அக்டோபர் 23-ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கலாகும் என்று சிபிஐஅறிவிப்பு.

அக்டோபர் 23: விசாரணை அறிக்கை தாக்கல் செய்வது தள்ளிவைப்பு.

அக்டோபர் 30: மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சிபிஐயின் விசாரணை அறிக்கை மத்தியஅரசிடம் சமர்ப்பிப்பு.

நவம்பர் 1: சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X