பாட்டியைக் கொன்ற வாலிபருக்கு 19 ஆண்டு சிறை
கோவை:
கோவையில் வயதான பெண்ணைக் கொன்று நகையைக் கொள்ளையடித்துச் சென்ற வாலிபருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் அம்மாசை என்ற சுப்பாத்தாள் (65). இவரது கணவர் அம்மாசை (68), இருவரும் எருமைப்பண்ணை வைத்திருந்தனர்.
இதன்மூலம் பால் விற்று கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். அம்மாசையும், அருகில் கடை வைத்திருந்த சரவணன் (23) என்பவரும்நல்ல நட்புடன் பழகி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 1998ம் ஆண்டு மார்ச் மாதம் அம்மாசையைப் பர்க்க, சரவணன் அவரது வீட்டிற்குச் சென்றார். அப்போது அங்கு சுப்பாத்தாள் சமையல்செய்து கொண்டிருந்தார். சரவணன் சுப்பாத்தாளிடம் சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அம்மாசை எருமை மேய்க்கச் சென்று விட்டார்.
அம்மாசை வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது சுப்பாத்தாள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பீரோவிலிருந்த 15 பவுன்நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருந்ததையும் அறிந்தார். இதனையடுத்து போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து சரவணனைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகம், கொலை வழக்கில் சரவணனுக்கு ஆயுள்தண்டனையும், கொள்ளையடித்த வழக்கில் 5 ஆண்டு சிறையும் விதித்து தீர்ப்பளித்தார்.