For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகப்பாவை மீண்டும் காட்டுக்கு அனுப்ப தயார் .. தந்தை

By Staff
Google Oneindia Tamil News

தார்வார்:

வீரப்பன் திரும்ப அழைத்தால் என் மகன் நாகப்பாவை திரும்பவும் காட்டுக்கு அனுப்பத் தயார் என்று நாகப்பாவின் தந்தை கூறினார்.

வீரப்பன் பிடியிலிருந்து 60 நாட்களுக்குப் பிறகு, அரசுத் தூதராக நக்கீரன் கோபால் 4 வது முறையாகக் காட்டிற்குச் சென்றிருந்த போதுபிணைக்கைதிகளில் ஒருவரான நாகப்பா தப்பித்து வந்துவிட்டார்.

நாகப்பாவின் சொந்த ஊர் தார்வார் அருகேயுள்ள மரதகி ஆகும். அங்கு நாகப்பாவின் தந்தை ருத்ரப்பா கொட்டாவும், தாய் மல்லவாவும் வசித்துவருகிறார்கள்.

நாகப்பா தப்பி வந்தது குறித்து அவரின், தந்தை ருத்ரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் மகன் நாகப்பாவுக்கு எல்லாமே ராஜ்குமார்தான். அவர் தங்கள் சொந்த மகன் போல் நாகப்பாவை நடத்தி வந்தனர். நாகப்பா இந்த அளவுஉயர்ந்ததற்கு ராஜ்குமார்தான் காரணம்.

நாகப்பா தப்பி வந்தது குறித்து பக்கத்துவீட்டுக்காரர்கள் கூறிய போது நான் நம்பவே இல்லை. டெலிவிஷனில் பார்த்தபோதுதான் நம்பினேன். நாகப்பாஎங்களுடன் மரதகியில் கொஞ்ச நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதைக் கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அதேநேரம் ராஜ்குமார் வரவில்லை என்று தெரிந்ததும் மிகவும் கவலையடைந்துள்ளேன்.

ராஜ்குமார் திரும்பி வந்தால்தான் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். எனவே சந்தனக் கடத்தல் வீரப்பன் அழைத்தால் நாகப்பாவை காட்டுக்கு அனுப்பத்தயாராக இருக்கிறோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X