For Daily Alerts
Just In
தீவிரவாதிகள் சுட்டு 5 போலீஸார் சாவு
குவஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்த போடோதீவிரவாதிகள் 5 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றனர்.
போடோ தேசிய ஜனநாயக முன்னணி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்இவர்கள். செவ்வாய்க்கிழமை இரவு ருப்சி விமான தளத்தில் உள்ள போலீஸ்நிலையத்திற்குள் புகுந்தனர். அங்கிருந்த போலீஸ்காரர்கள் மீது சரமாரியாக சுட்டனர்.இதில் 5 பேர் அங்கேயே இறந்தனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். துப்ரி காவல்நிலையம் அமைந்துள்ள விமான தளம் இரண்டாவது உலகப் போரின்போதுபயன்படுத்தப்பட்டது. இப்போது பயன்படுத்தப்படாமல் வெறுமனே உள்ளது.தீவிரவாதிகளை அடக்குவதற்காக இந்தப் பகுதியில் போலீஸ் நிலையம்ஏற்படுத்தப்பட்டது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, November 1, 2000, 5:30 [IST]