பெரியாறு அணையை உயர்த்தக் கோரி வாகனப் பேரணி
சென்னை:
பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உரிய நீரை கேரளம் தரக் கோரி தமிழ் தமிழர்இயக்கம் சார்பில் நடத்தப்படும் வாகனப் பேரணி சிவகங்கையிலிருந்து புதன்கிழமைதுவங்குகிறது.
நீர் உரிமை மீட்புப் பயணம் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
சிவகங்கையில் துவங்கும் இந்த வாகனப் பயணம், உசிலம்பட்டியில் முடிவடைகிறது.வாகனப் பேரணிக்கு தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமைவகிக்கிறார்.
இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்ரத்தினசாமி உள்ளிட்ட பலர் பேரணியில் பங்கேற்கின்றனர். 1-ம் தேதி துவங்கும் இந்த நீர்உரிமை மீட்புப் பயணம் 5-ம் தேதி முடிகிறது.
பேரணித் துவக்கி வைத்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர்மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாள் பரந்தாமனும் பேசுகின்றனர்.நிறைவு விழாவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசுவார்.
பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால், தென்மாவட்டங்களில் விவசாய நிலங்கள் தரிசு நிலமாகும் அபாயம் உள்ளது. இதுகுறித்தவிழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அணை உயரத்தை அதிகரிக்கக் கோரும்விதத்திலும் பேரணி நடத்தப்படுவதாக தமிழ் தமிழர் இயக்கம் கூறியுள்ளது.