For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்.14-ல் போராட்டம் நடத்துகிறது புதிய நீதிக் கட்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் அக்டோபர் 14-ம் தேதிபோராட்டம் நடத்தப்படும் என்று புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.

புதிய நீதிக் கட்சியின் சார்பில் சென்னையில் நடந்த முதலாவது மாநில மாநாட்டில் அவர் பேசுகையில்,தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சியும் தனியாக ஆட்சியமைக்க முடியாது.புதிய நீதிக் கட்சியின் ஆதரவு, ஆட்சியமைக்க விரும்பும் கட்சிக்கு கண்டிப்பாக தேவைப்படும்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மக்கள் விரோதக் கட்சிகள். பாட்டாளி மக்கள் கட்சிவன்முறை அரசியலை மேற்கொண்டு வருகிறது. நீதித்துறையில் பாட்டாளி மக்கள் கட்சி இட ஒதுக்கீடுவழங்கக் கோருவது நியாயமில்லாதது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். இதை நெசவாளர்களுக்கும்நீட்டிக்க வேண்டும் என்றார் அவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X