கனடாவில் இலங்கைத் தமிழர் கோஷ்டிகளிடையே மோதல் - 2 பேர் சாவு
டொரான்டோ:
கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர் கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டது.
கனடா தலைநகர் டொரான்டோவின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமைநடந்த இம் மோதலில் 2 இளைஞர்கள் பலியானார்கள். இரண்டு பேர் காயமடைந்தனர்.
டொரன்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்போரோ என்ற இடத்தில் நடந்த மோதலில்கைத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மோதலில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.இதனால், இறந்தவர்களின் பெயர்களை டொரான்டோ மாநகரப் போலீஸார் இன்னும்அறிவிக்கவில்லை.
கனடாவில் தற்போது 2 லட்சம் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களிடையேவி.வி.டி. என்பவர் தலைமையில் ஒரு கோஷ்டியும், ஏ.கே. கண்ணன்ஸ் என்பவர்தலைமையில் ஒரு கோஷ்டியும் இயங்கி வருகின்றன.
இரு கோஷ்டிகளிடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம் என்றும்,இப்போது டொரான்டோவில் நிலைமை சீரடைந்துவிட்டதாகவும் போலீஸார்தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.