ஜெர்மனியைக் கவர்ந்த இந்திய ஐ.டி. நிறுவனங்கள்
டெல்லி:
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நடந்த ஐரோப்பிய பேங்கிங் டெக்னாலஜி கண்காட்சியில் கலந்து கொண்ட 11இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தனித் திறமையைப் பறை சாற்றியுள்ளன.
இந்தக் கண்காட்சியில் 7500 க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஜெர்மனி நிதிஅமைச்சர் கூறுகையில், இந்த முறைதான் நாங்கள் ஐரோப்பியர்கள் அல்லாத, பிற நாட்டைச் சேர்ந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களை இக்கண்காட்சியில் பங்கு பெறச் செய்தோம்.
இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, தகவல் தொழில் நுட்பத்தில் தனது முத்திரையைப்பதித்து விட்டது என்றார்.
தாமஸ் ஸ்கூட்ஸ் என்பவர் கூறுகையில், பேங்கிங் டெக்னாலஜி கண்காட்சியில் இந்தியா கலந்து கொண்டது மிகவும்மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய நிறுவனங்கள் தங்களது தனித் தன்மையைப் பறைசாற்றியது குறித்து நாங்கள் மிகவும்மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
இந்தக் கண்காட்சியில் இந்தியா சார்பில், இன்போடெக்ஸ், டிஎஸ்க்யூ சாப்ட்வேர், சிஎம்சி லிமிடெட், போலாரிஸ்சாப்ட்வேர் லேப், நியூகிளியஸ் சாப்ட்வேர் எக்ஸ்போர்ட்ஸ் ஆகியவை கலந்து கொண்டன.
யு.என்.ஐ.