For Quick Alerts
For Daily Alerts
Just In
ரத்தினக் கற்களை வாங்க வந்து திருடிச் சென்றவர்கள்
பாண்டிச்சேரி:
விலை உயர்ந்த ரூபி கற்களை வாங்குவதில் பேரம் கனியாததால், கற்களை வாங்கவந்தவர்கள், அதைத் திருடிச் சென்றனர்.
பாண்டிச்சேரி ஜவஹர் நகரில் வசித்து வரும் ஜெயவேல் என்பவர் பட்டை தீட்டப்படாதவைரக் கற்களை சென்னையைச் சேர்ந்தவர்களிடம் விற்பதற்காக கொண்டு சென்றார். அந்தகற்களின் விலை ரூ. 2 லட்சம் ஆகும்,
கற்களை வாங்க வந்தவர்களுக்கும் ஜெயவேலுக்கும் இடையே பேரம் கனியாதகாரணத்தால் ஜெயவேல் கற்களை விற்க மறுத்து திரும்பி சென்று விட்டார். இந்நிலையில்கற்களை வாங்க வந்த சென்னையைச் சேர்ந்தவர்கள் காரில் ஜெயவேலுவைப் பின்தொடர்ந்து சென்று அவரை வழிமறித்து அவரைத் தாக்கி ரூபி கற்களுடன் தப்பி ஓடிவிட்டனர்.
கற்களுடன் தப்பிச் சென்ற கும்பலைத் தேடும் பணி நடந்து வருகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, November 3, 2000, 5:30 [IST]