குறையும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வருகை
டெல்லி:
இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட, இந்த வருடம், முதல் 10 மாதங்களில் 5.7 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த வருடம் சுற்றுலா பயணிகள் மூலம் 11, 084 கோடி அன்னியச் செலாவணி கிடைத்தது. இந்த ஆண்டு இது 10, 245 கோடியாக குறைந்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நியச் செலாவணி வருவாய் 13.2 சதவீதமாகவும், மே மாதம் 8.4 சதவீதமாகவும் ஜூலை மாதம் 8.4சதவீதமாகவும், செப்டம்பர் மாதம் 7.1 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த வருடம் இந்தியாவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2, 19, 442 ஆக இருந்தது. இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை2, 13, 131 ஆகக் குறைந்துள்ளது. அதாவது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஜனவரி மாதம் 2, 66, 972 பேரும், பிப்ரவரியில் 2, 54, 721 பேரும், மார்ச் மாதத்தில் 2,35,326 பேரும் இந்தியாவிற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளாக வந்துள்ளனர்.
யு.என்.ஐ.