காங்கிரஸ் "பந்த் .. பாண்டி ஸ்தம்பித்தது
பாண்டிச்சேரி:
பெட்ரோலிப் பொருட்கள் விலை உயர்வை உடனே வாபஸ் பெறக் கோரி, பாண்டிச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுத்திருந்த ஒரு நாள்பந்த் முழுமையாக இருந்தது.
வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள், இரண்டு சக்கர வாகனங்கள், டெம்போக்கள் எதுவும்ஓடவில்லை. மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தொலை தூரப் பஸ்கள் மட்டும் இயங்கின.
அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மத்திய அரசு அலுவலகங்களில் சொற்ப ஊழியர்களே வந்திருந்தனர்.
அரியங்குப்பம் பகுதியில் சாலை மறியல் செய்ய முயன்ற 21 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதட்டம் நிறைந்த பகுதிகளாக கருதப்படும் இடங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையே இந்த பந்த் தேவையில்லாத ஒன்று என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.