சம விகிதத்தில் வாக்காளர்கள் .. புதுவை கட்சி கோரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை சம விகிதத்தில், மாற்றி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிட பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறுத்து திராவிடப் பேரவை கட்சியின் பொதுச் செயலாளர் நந்திவர்மன், பிரதமர் வாஜ்பாய், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்னான்டஸ் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையை சமஅளவில் கொண்டு வர தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.ஆனால், இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் தேவைப்படுகிறது.
தற்போது ஜாதி பெயரால் பல கட்சிகள் உருவாகி வருகின்றன. இந்தக் கட்சிகளால் நாட்டின் ஜனநாயகத்துக்கும், இந்திய அரசியலமைப்புக்கும் பலஇடையூறுகள் ஏற்படும்.
தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னால் தேர்தல் நடக்கும் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையைசமவிகிதமாக்க வேண்டும்.
இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.