For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிஜி: திடீர் கலகத்திற்கு ரபுகா காரணம்?

By Staff
Google Oneindia Tamil News

சுவா:

பிஜியில் வியாழக்கிழமை நடந்த திடீர் வன்முறை மற்றும் கலகத்திற்கு முன்னாள் பிரதமர் சிட்டிவேனி ரபுகாதான் காரணம் என்று பிஜி ராணுவம்குற்றம் சாட்டியுள்ளது.

பிஜியில் வியாழக்கிழமை காலை ராணுவ அதிகாரிகள் வசிக்கும் குயின் எலிசபெத் மாளிகையில் ராணுவத்தின் ஒரு பிரிவு வீரர்கள் திடீர் என்று துப்பாக்கிச்சூட்டில் இறங்கினர். இதில் 8 ராணுவ வீரர்கள் இறந்தனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில், முன்னாள் பிரதமர் ரபூகாவும், மூத்த ராணுவ அதிகாரிகளும் இருக்கலாம் என்று பிஜி ராணுவம் கூறியுள்ளது.

ராணுவ செய்தித்தொடர்பாளர் ஹோவர்ட் பொலிடினி கூறுகையில், ராணுவ கமாண்டர் பிராங்க் பெய்னிமாரமாவைப் பதவி நீக்கம் செய்யும் விதத்தில் தான்கலகக் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அவர்கள் பிராங்க் பெய்னிமாராமாவையும் தாக்குதல் நடத்த முயன்றனர்.

இருப்பினும் அவரைச் சுற்றியிருந்த 8 க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள், எதிர் தாக்குதல் நடத்தி அவரைக் காப்பாற்றினர். 40 க்கும் மேற்பட்டபுரட்சித் தடுப்புப் பிரிவினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டனர் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X