தமிழுக்கு மரியாதை தாருங்கள்.. கோருகிறார் கருணாநிதி
சென்னை:
தூர்தர்ஷனின் தேசிய ஒளிபரப்பில் ஹிந்திப் படங்களை மட்டுமே திரையிடுவது என்றபிரசார் பாரதி அமைப்பின் முடிவு, பாரபட்சமானது என்று தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குகருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநில அளவிலான தூர்தர்ஷன்களில் (டி.வி.) மட்டுமே தமிழ் உள்ளிட்ட பிராந்தியமொழிப் படங்களை திரையிடுவது என்றும் தேசிய ஒளிபரப்பில் ஹிந்திப் படங்களைமட்டுமே திரையிடுவது என்றும் மத்திய செய்தி, ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ்செயல்படும் பிரசார் பாரதி அமைப்பு முடிவு செய்துள்ளது.
பிரசார் பாரதியின் இந்த முடிவு பாரபட்சமானது. இந்த ஒருதலைபட்சமான முடிவைஉடனடியாக பிரசார் பாரதி வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். ஹிந்தி மொழிக்குஇணையாக பிற மொழிகளுக்குரிய மரியாதையை பிரசார் பாரதி அளிக்க வேண்டும்.
தேசிய ஒளிபரப்பில் ஒளிபரப்பப்படும் ஹிந்திப்படங்களுக்கு, ஒரு படத்துக்கு பிரசார்பாரதி ரூ. 12 லட்சம் அளிக்கிறது. ஆனால் பிராந்திய மொழிப் படங்களுக்கு வெறும்ரூ. 1லட்சம் மட்டுமே அளிக்கப்படுகிறது. இதுவும் முறைகேடானது. இதையும் பிரசார்பாரதி வாபஸ் பெற வேண்டும் என்று கருணாநிதி தனது கடிதத்தில் கூறியிருந்தார்.