For Quick Alerts
For Daily Alerts
Just In
வைகோ விளக்கமளிக்கக் கோருகிறார் வாழப்பாடி
மதுரை:
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தைசந்தித்தது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளிக்க வேண்டும்என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாலசிங்கத்தைச் சந்தித்ததைவைகோ மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை.
எனக்கும், பாமக தலைவர் ராமதாஸுக்கும் இடையே நடக்கும் மோதலால், வாஜ்பாய்அரசுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்குஎந்தவித பாதிப்பும் இதனால் ஏற்படாது.
வன்னியர் சமுதாயத்தை ராமதாஸ் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இதுஇப்போது தொடங்கியதில்லை. கடந்த 20 ஆண்டுகளாகவே அவர் இந்த ஏமாற்றுவேலையை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார் வாழப்பாடி.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, November 5, 2000, 5:30 [IST]