For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்சாட்-2பி கைவிடப்பட்டது

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கடந்த இரு நாட்களில் 2 முறை பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளநிலையில், இன்சாட்-2பி செயற்கைக் கோளின் தகவல் தொடர்பு பணிகள் வேறுசெயற்கைக் கோள்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆய்வுக் கழக (இஸ்ரோ) தலைவர் கஸ்தூரிரங்கன்கூறுகையில், இன்சாட்-2பி செயற்கைக் கோளின் முக்கியப் பணிகள் வேறு செயற்கைக்கோள்களுக்கு மாற்றப்பட்டு விட்டன.

ஒளிபரப்பு, தகவல் தொடர்பு போன்ற பணிகளை இதுவரை இந்த செயற்கைக் கோள்மேற்கொண்டு வந்தது. இனிமேல் தகவல் தொடர்பு தொடர்பான பரீட்சார்த்தபணிகளுக்கு மட்டும் இன்சாட்-2பி பயன்படுத்தப்படும்.

1993-ம் ஆண்டு ஜூலை மாதம் இன்சாட்-2பி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்ஆயுள்காலம் 7 ஆண்டுகள். அதைக் கடந்தும் கூட சிறப்பாக அது இயங்கி வந்தது.வெள்ளிக்கிழமை பூமியுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளேஇணைப்பு மீண்டும் வந்தது. ஆனால் மறுபடியும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்மீண்டும் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. மறுபடியும் திங்கள்கிழமை முதல் செயற்கைக்கோளுடன் இணைப்பு கிடைத்தது.

செயற்கைக் கோளுடன் இணைப்பு கிடைத்தாலும் கூட இதை தொடர்ந்து அதன் வட்டப்பாதையில் சுற்ற வைப்பதில் பல சிரமங்கள் உள்ளன. எனவே இதை வழக்கமானபணிகளுக்குப் பயன்படுத்தவதற்குப் பதில் பரீட்சார்த்த பணிகளுக்கு பயன்படுத்தமுடிவு செய்துள்ளோம்.

இன்சாட்-2பி இதுவரை செய்து வந்த பணிகளை இன்சாட்-2சி, இன்சாட்-3பி ஆகியசெயற்கைக் கோள்கள் இனிமேல் கவனித்துக் கொள்ளும் என்றார் கஸ்தூரி ரங்கன்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X