For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலிய கடலில் சுறாவுக்கு இரையானவர்

By Staff
Google Oneindia Tamil News

பெர்த் (ஆஸ்திரேலியா):

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடலில் நீந்திக் கொண்டிருந்தவர் சுறாமீன் கடித்து இறந்தார். இன்னொருவர் காயமடைந்தார்.

பெர்த் கடலில் திங்கள்கிழமை காலை இரண்டு பேர் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது நீரின் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் அடி ஆழத்திலிருந்துமிகப்பெரிய சுறாமீன் ஒன்று இவர்களைப் பிடித்துக் கொண்டது. சுறாவிடம் சிக்கி ஒருவர் இறந்தார். இன்னொருவர் காயமடைந்தார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், சுறாமீன் 4 மீட்டர் நீளமுடையதாக இருந்தது என்றனர். கடந்த செப்டம்பர் மாதம் அடிலைட்டில் உள்ளகடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் சுறாமீன் கடித்து இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X