அடுத்த அதிபர் யார்?
வாஷிங்டன்:
மனைவியுடன் ஜார்ஜ் புஷ் |
அமெரிக்க அதிபராகவும், உலக வல்லரசுகளில் முதன்மையான நாட்டின் அதிபராகவும்இருந்த பில் கிளிண்டன் ஓய்வு பெறுகிறார். அடுத்த அதிபர் யார் என்பதை அமெரிக்கமக்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
துணை அதிபர் அல் கோர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக இருக்கிறார்.முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகன், ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஜூனியர் குடியரசுக்கட்சி வேட்பாளராக களத்தில் இருக்கிறார். உப்புக்கு சப்பானி போல மூன்றாவதுவேட்பாளராக கிரீன் பார்ட்டி வேட்பாளர் ரால்ஃப் நாடர் இருக்கிறார்.
அல் கோர் |
யார் அதிபராக வருவார்கள் என்று உறுதியாக கூற முடியாத அளவுக்கு கோரும்,புஷ்ஷும் மாறி, மாறி, கருத்துக் கணிப்பில் வாக்குகளைப் பெற்று, போட்டியில்விறுவிறுப்பை ஏற்படுத்தினர். இவர்தான் வருவார் என்று இப்போது வரை உறுதியாககூற முடியாத நிலை நிலவுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில், இந்தியர்களும் அடிபட்டார்கள். முதல்முறையாக இந்தியர்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளியை அல் கோரும், ஜார்ஜ்புஷ்ஷும் கொண்டாடினார்கள். இந்தியர்களின் வாக்கு அவர்களுக்கு மிகவும்அத்தியாவசியமானதாகி விட்டதையே இது காட்டியது.
ரால்ஃப் நாடர் |
உலக அளவிலும் யார் அமெரிக்கா அதிபராக வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. அடுத்த அதிபருக்கும், நமக்கும் எப்படி உறவு இருக்கும்,இருக்க வேண்டும்என்று உலக நாடுகள் ஒப்பிட்டுப் பார்க்கத் துவங்கி விட்டன.
இத்தனை களேபரத்துக்கிடையே செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமெரிக்கஅதிபர் தேர்தல் அமெரிக்காவுக்கு எப்படி முக்கியமோ, அதே அளவு இந்தியாவுக்கும்முக்கியமானது.