இனி அப்பீல் செய்ய வழியில்லை.... கருணாநிதி
சென்னை:
தடா கைதிகள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலே அப்பீல் செய்ய வேறு இடம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமைகூறினார்.
இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை தேறி வருகிறது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தடா கைதிகளை விடுவிப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. ஜெயலலிதா போல் நான் நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காதவன் அல்ல. நீதிமன்றதீர்ப்புக்களை மதிப்பவன்.
வீரப்பன் நிபந்தனைப்படி தடா கைதிகளை விடுவிக்க, இனிமேல் அரசுத் தரப்பில் எதுவும் செய்ய முடியாது. உச்ச நீதிமன்றத்துக்கு மேலே அப்பீல் செய்யவேறு இடம் இல்லை என்றார் கருணாநிதி.
முன்னதாக, வீரப்பன் விடுவிக்கக் கோரும் 51 தடா கைதிகளையும், 5 தமிழ் தீவிரவாதிகளையும் விடுதலை செய்யக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.
56 தடா கைதிகளையும் விடுவித்து மைசூர் மற்றும் சென்னை சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் செவ்வாய்க்கிழமை ரத்துசெய்தது.