For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோவுக்கு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

விடுதலைப் புலிகள் விஷயத்தில், மதிமுக தலைவர் வைகோ கூழுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை என்ற ரீதியில் செயல்படுகிறார் என்று தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.

மதுரையில் வாழப்பாடி ராமமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ லண்டனில் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தை சந்தித்துப் பேசியதாகசெய்திகள் வெளியாகியுள்ளன. அவரது கட்சியைச் சேர்ந்த 2 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர்.

ஆனால் வைகோ முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுகிறார். அவரது செயல்பாடுகள் மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக் கொண்டதாகத்தெரியவில்லை. அவர் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற ரீதியில் செயல்பட்டு வருகிறார்.

தற்போது தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் தலைவரும் திடமாகப் பேச முடியாதவாறு குழப்பமான மனநிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் 3 வது அணி அமைத்து மூப்பனாரை முதல்வராக்க வேண்டும் என்று பலர் திட்டமிடுகிறார்கள். 3 வது அணி அமைக்க முயன்ற மூப்பனார்பலமுறை தோற்றுப் போயுள்ளார். மீண்டும் அதே முயற்சியுடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் மூப்பனார் 3 வது அணியை நிச்சயமாக அமைப்பார்.

வரும் தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதற்காக இரு கட்சியினரும் சந்தித்து பேசி உள்ளார்கள். வரும் தேர்தலில்ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோர் போட்டியிட முடியாது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X